November 20th, 2011


 

 

 

 

 

 

 

 

.

 

நனைந்துவிடாமல்
மழைத்துளிகளிடையே
பறந்து திரியும் ஈசல்களின்
லாவகம் காட்டுகின்றன
உன் சொற்கள்.
அப்படியா என்று கேட்டால்
ஆமாமாமாமா என்று
மாமாவில் முடிக்கிறாய்.
கிறுக்கா என்றால்
இருக்கிறுக்கிறுக்கிறுக்கு என்றே
கிறுக்கில் நிறுத்தி
புன்னகைத்து முகம் பார்க்கிறாய்.
சொற்சேர்க்கையில் நிகழ்கிறது ஒளிச்சேர்க்கை
மற்றும்
மாயக்கண்ணாடியைக் கொண்டிருக்கும்
என் குட்டி இளவரசிக்கு
பூதகி என்றும் பெயர்.